அஇஅதிமுக அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க சார்பில் ஆர்ப்பாட்டம்.
முகேஷ்
UPDATED: May 22, 2023, 2:36:40 PM
முன்னாள் முதல்வர் எடப்பாடி K.பழனிச்சாமி ஆணைக்கிணங்க கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் N.தளவாய்சுந்தரம் அறிவுறுத்தலின்படி கன்னியாகுமரி மாவட்ட அஇஅதிமுக அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க சார்பில்,
ராணி தோட்டம் பனிமனை முன்பு தமிழக ஆட்சியாளர்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் எதிராக போக்குவரத்து தொழிலாளி இன்பசேகரன் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நிமிர்த்தம் காரணமாக அவர் உயிர் இழந்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் G.சுகுமாரன் தலைமை தாங்கினார்,போக்குவரத்து கழக மண்டல செயலாளர் விஜயகுமார் முன்னிலையிலும் முன்னாள் நாகர்கோவில் நகர கழக செயலாளர் சந்துரு (எ) ஜெயச்சந்திரன் முன்னிலையிலும் அரசு அலுவலர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக நிகழ்வில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.