பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் , 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி டவும் நாள் ஒன்றுக்கு ரூபாய் 600 ஊதியம் வழங்கிட வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ஆர்.உஷா , மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இரா.மஞ்சுளா , மாவட்ட குழு உறுப்பினர் பி.லிட்டின்மேரி , ஒன்றிய பெருந்தலைவர் மணிமேகலை முருகேசன் , முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.அம்புஜம் ஆகியோர் கோரிக்கையை விளக்கி கண்டன உரையாற்றினர். இறுதியாக ஜி.செல்வமேரி நன்றி கூறினார்.
மன்னார்குடி செய்தியாளர் S. வீரமணி