ஸ்ரீமுஷ்ணத்தில் அர்ஜுன் சம்பத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் உருவப்படத்தை செருப்பால் அடித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அர்ஜுன் சம்பத் விடுதலை சிறுத்தையின் பொது செயலாளர் தொல் திருமாவளவனை பற்றி பல அவதூறான கருத்துக்களை பரப்பியதோடு மட்டுமல்லாமல் பல்வேறு தொலைக்காட்சிக்கு பேட்டியும் அளித்ததாக விடுதலை சிறுத்தையின் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே கண்டன கோஷங்கள் எழுப்பி வருகின்றனர் .
இன்று ஒன்றிய செயலாளர் ரவி தலைமையில் மற்றும் ரஜினிகாந்த் , ராஜவேல் மாவட்ட விவசாய அணி தலைவர் மாரிமுத்து மற்றும் 20க்கும் மேற்பட்டோர் அர்ஜுன் சம்பத்தை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பியதோடு அர்ஜுன் சம்பத் உருவப்படத்தை செருப்பால் அடித்தனர்.
இதனால் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, பின்னர் காவல்துறை உதவி ஆய்வாளர் இப்ராஹிம் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டதோடு அனைவரும் கலைந்து சென்றனர்.
ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.