கனிமவளக் கொள்ளையை கண்டித்து அதிமுக நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்.
ராஜ்குமார்
UPDATED: May 21, 2023, 7:00:00 PM
கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க, கழக அம்மா பேரவை செயலாளர், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையிலும்,
விடியா திமுக அரசில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களிலிருந்து தினமும் கணக்கில்லாமல் கேரளாவுக்கு கடத்தப்படும் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த,
புளியரையில் மே 26 காலை 10 மணியளவில் அதிமுக நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் தலைமையில் செங்கோட்டையில் சிறப்பாக நடைபெற்றது.
நிர்வாகிகள், தலைமைக் கழக பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பூர்த்தி செய்யப்பட்ட உறுப்பினர் சேர்க்கை படிவங்களை ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர் அவர்களிடம் ஒப்படைத்தனர்.