பேருந்தில் பயணம் செய்த போது உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கும்பகோணத்தில் அரசு கலைக் கல்லூரியில், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் சேர்ந்தமங்கலம் மாணவன் சதீஷ்குமார் , அரசினர் கலைக் கல்லூரியில் பிஏ சுற்றுலா துறை படித்து வந்தார் .
இந்நிலையில் கடந்த 2ம் தேதி பேருந்து படியில் நின்றவாறு பயணம் செய்தபோது , பேருந்து நிலையம் அருகே 60 அடி சாலையில் பஸ் திரும்பும்பொழுது ,சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த மின்கம்பத்தில் விளம்பரப்பலகை மீது மோதி, நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தமிழக அரசு உயிரிழந்த சதீஷ்குமார் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவில்லை, இது சம்பந்தமாக அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர், மேலாளர் ,கோட்டாட்சியர் , காவல்துறை அதிகாரிகள் , யாரும் மாணவர்களின் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தோம் யாரும் வரவில்லை.
உயிரிழந்த சதீஷ்குமார் குடும்பத்திற்கு தமிழக அரசு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை , உடனே நிவாரணம் வழங்கக்கோரியும் பள்ளி கல்லூரி நேரங்களில் அதிக பேருந்துகள் இயக்க கோரியும் , இந்திய வாலிபர் சங்கம் சார்பில் அரசு கலைக் கல்லூரி முன்பு மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.