• முகப்பு
  • crime
  • நீர்நிலை புறம்போக்கு கோவில் இடம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்காத திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

நீர்நிலை புறம்போக்கு கோவில் இடம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்காத திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் தாலுகா மணக்கால் அய்யம்பேட்டை ஊராட்சியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நீர்நிலை புறம்போக்கு கோவில் இடம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்காத திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தையும் மற்றும் மாவட்ட ஆட்சியரை கண்டித்து மணக்கால் அய்யம்பேட்டை கடைத்தெருவில் வளரும் தமிழகம் கட்சியின் மாநில பொருளாளர் ஆரோக்கிய செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் வளரும் தமிழகம் கட்சியின் மாநில பொருளாளர் கூறுகையில் இன்னும் 15 நாட்களில் மணக்கால் அய்யம்பேட்டை ஊராட்சியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நீர்நிலை புறம்போக்கு கோயில் இடம் ஆக்கிரமிப்பு மற்றும் அரசு புறம்போக்கு இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அவர்களை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திறல் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வளரும் தமிழகம் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் ராஜா நாகை மாவட்ட செயலாளர் லட்சுமணன் மாவட்ட இணைச்செயலாளர் அரிஸ்டாட்டில் மாவட்ட தலைவர் அசோக் குமார் மாவட்ட விவசாய அணி செயலாளர் அசோக் திருவாரூர் ஒன்றிய செயலாளர் முருகானந்தம் மற்றும் சுமார் 50க்கும் மேற்பட்ட வளரும் தமிழகம் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு அரசு அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended