• முகப்பு
  • district
  • அரசு நேரடி கொள்முதல் மையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோணிப்பைகள் கிழிந்துள்ளதால் நெல் மூட்டைகளை கிடங்கிற்கு அனுப்புவதில் தாமதம் - விவசாயிகள் புகார்

அரசு நேரடி கொள்முதல் மையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோணிப்பைகள் கிழிந்துள்ளதால் நெல் மூட்டைகளை கிடங்கிற்கு அனுப்புவதில் தாமதம் - விவசாயிகள் புகார்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 66 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பஞ்சாயத்தில் காட்டுப்பட்டூர் ,மேட்டு பரந்தூர், பல்ல பரந்தூர், நாக பட்டு, உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளது . மேட்டுபரந்தூர் பகுதியில் கடந்த மே மாதம் 1ஆம் தேதி துவக்கப்பட்ட அரசு நேரடி கொள்முதல் மையத்தில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மணிகளை விற்பனை செய்து வருகின்றார்கள் .அதில் சுமார் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் நவரை பயிர்கள் விளைவித்து வருகின்றனர். இந்த கொள்முதல் மையத்தில் கடந்த மே மாதம் 1ஆம் தேதி 5000 கோணிப்பைகள் நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து அனுப்பப்பட்டன .அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோணிப்பைகள் கிழிந்து சேதமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகளை பிடிக்க கோணிப்பைகள் போதாததால் நெல்மணிகள் கோடை மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதமடைகிறது . எனவே நுகர்பொருள் வாணிப கழகம் சேதமடைந்த கோணிப் பைகளை திரும்ப பெற்று புதிய கோணிப் பைகளை உடனே வழங்குமாறு அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர். நெல் கொள்முதல் நிலையம் துவங்கி ஒரு வார காலத்திற்குள்ளேயே நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து வழங்கப்பட்ட கோணிப்பைகள் தரமற்ற கிழிந்த நிலையில் உள்ளது அதிகாரிகளின் மெத்தனப் போக்கை காண்பிக்கிறது. காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended