• முகப்பு
  • district
  • பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (18.07.2022) நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மக்களின் மனுக்களின் மீது ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுத்த அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் கோரிக்கைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் அரசு அலுவலர்களை நாடி வந்து பொதுமக்கள் தரும் மனுக்களை உரிய ஆய்வுக்கு உட்படுத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் நம்பிக்கையினை காப்பாற்றும் வகையில் அரசு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 263 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) தளபதி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சரவணன் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்ட செய்தியாளர் ஜகாங்கீர்

VIDEOS

RELATED NEWS

Recommended