சத்தியமங்கலம் கடம்பூரில் விவசாய நிலத்தில் ஒற்றை யானையின் அட்டகாசத்தால் பயிர்கள் சேதம்.

மகேஷ் பாண்டியன்

UPDATED: May 10, 2023, 5:44:05 AM

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் மலைப்பகுதி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள விவசாயத் தோட்ட பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக மாலை நேரங்களில் உள்ளே புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும் ஒற்றை காட்டு யானை...

வனத்துறையினர் அலட்சியப்படுத்தி வருவதால் தினந்தோறும் கிராம மக்களை வனத்திற்குள் விரட்டி அடித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பதில் யானை ,புலி, சிறுத்தைபுலி, கரடி என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக யானைகள் உணவுக்காகவும், தண்ணீருக்காவும் வனத்தை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும்  மனிதர்களை தாக்கிக் கொல்லுவது தொடர்கதையாக உள்ளது.

இந்த நிலையில் கடம்பூர் மலைப்பகுதி பூதிக்காடு மலை கிராம பகுதியில் கடந்த நான்கு நாட்களாக மாலை நேரத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் பூதிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் விவசாய தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் மற்றும் பூசணிக்காய் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் காளான் மிதித்தும் தின்றும் சேதப்படுத்தியது.

இதனை அடுத்து அப்பகுதி மக்கள் கடந்த நான்கு நாட்களாக கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தும் வனத்துறையினர் காட்டு யானையை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபடாமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.

இதனால் அப்பகுதி கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அந்த ஒற்றை யானையை தினந்தோறும் வனத்திற்குள் விரட்டியடித்து வருகின்றனர் இது தொடர்கதையாக உள்ளது.

இதனால் வனத்துறையினர் யானை மனித மோதல் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • 1

VIDEOS

RELATED NEWS

Recommended