கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் உலக பிரசித்தி பெற்ற பூவராக சன்னதி கோபுரத்தில் இடி தாக்கி நாசித் தலை சிதறி விழுந்தது...
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
மாலை முதல் இரவு வரை தொடர் மழையின் காரணமாக ஸ்ரீமுஷ்ணம் சுற்றுப்பகுதிகளில் மிதமான மழை பெய்து கொண்டு இருந்த நிலையில் திடீரென பலத்த சத்தம் கேட்டது.
இந்நிலையில் கோவில் சொர்க்கவாசல் கோபுரத்தின் மீது இடி விழுந்ததால் நாசித் தலை சிதறி விழுந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
மேலும் கோவில் பகுதியில் இடிதாங்கி உள்ள நிலையில் எப்படி இடி விழுந்தது என குழப்பம் நீடித்து வருகிறது. உடனடியாக இடிதாங்கி செயல்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.