தேனியில் எட்டாவது மாவட்ட மாநாடு தோழர் முத்தரசன் பங்கேற்றார்.!!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தேனியில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152அடியாக உயர்த்திட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பேரணி - பொதுக்கூட்டம். மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்பு.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட பொதுக்கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152அடியாக உயர்த்திட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் பேரணி நடைபெற்றது.
உத்தமபாளையம் புறவழிச்சாலையில் இருந்து பேருந்து நிலையம் வழியாக தேரடியில் நிறைவு பெற்ற இந்த பேரணியில்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேனி மாவட்டம் மற்றும் மாநில நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து தேரடித்திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாளை மாநில மாநாட்டு தேர்வு மற்றும் மாவட்டக் குழு தேர்வு நடைபெற உள்ளது.
தேனி செய்தியாளர் இரா.இராஜா.