மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருச்சிராப்பள்ளி மாவட்டம்,லால்குடி வட்டம், பெருவளப்பூர் பகுதி கண்ணாக்குடி கிராமத்தில் இன்று (29.6.22) நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்று, பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட திட்ட விளக்கக் கண்காட்சி அரங்குகள், அரசின் சாதனை விளக்க வீடியோ படக்காட்சி ஆகியவற்றினைப் பார்வையிட்டு, மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, 424 பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .
இந்நிகழ்வில் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.