ஆதிதிராவிடர் நல மாணவ மாணவிகள் விடுதியில் நேற்று இரவு கலெக்டர் திடீர் ஆய்வு !
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதி, ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி ஆகிய 4 இடங்களில் கலெக்டர் முருகேஷ் நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென ஆய்வு செய்தார்.
இதில் ஒரு விடுதியில் 55 மாணவர்களுக்கு ஒருவரும் இல்லை. ஆனால் அனைவரும் இருப்பது போல வருகை பதிவு இருந்தது. ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் இருக்கும் 60 மாணவிகள் வருகை பதிவு சரியாக இருந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 102 விடுதிகளில், ஜமுனாமரத்தூர் 2 விடுதிகள் நீங்கலாக 100 விடுதிகளில் அதிகாரிகள் ஒரே நேரத்தில் ஆய்வு செய்து வருவதாக கலெக்டர் முருகேஷ் கூறினார்.
திருவண்ணாமலை செய்தியாளர் பாலாஜி.
இன்றைய செய்திகள் திருவண்ணாமலை,இன்றைய முக்கிய செய்திகள் திருவண்ணாமலை,இன்றைய செய்திகள் திருவண்ணாமலை,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest india news tamil,Tamil news daily,District news,india news live,Thiruvannamalai news tamil,Thiruvannamalai news,Thiruvannamalai news in tamil today,Tjiruvannamalai news today in tamil,