- முகப்பு
- சீனா: ஷென்சென் நகரில் ஊரடங்கு
சீனா: ஷென்சென் நகரில் ஊரடங்கு
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தென் சீனாவின் தொழில்நுட்ப மையமான ஷென்சென் நகரில், புதிதாக 66 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அங்கு முழு ஊரடங்கு உத்தரவை உள்ளூர் நிர்வாகம் பிறப்பித்துள்ளது. ஹூவாய் உள்ளிட்ட மிகப் பெரிய நிறுவனங்கள் இந்த நகரில் செயல்பட்டு வருகின்றன. 17 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரில் ஏற்கனவே, அத்தியாவசியமற்ற இடங்கள் மற்றும் உணவகங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.