சென்னையில் வாகனங்களை ஓட்டிய சிறுவர்கள் வழக்குகள் பதிவு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சிறுவர்கள் வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் சிறப்பு வாகன தணிக்கையை போக்குவரத்து காவலர்கள் நடத்தி வருகின்றனர்.
கடந்த 14ம் தேதி சென்னையில் நடத்தப்பட்ட வாகன தணிக்கையில் சிறுவர்கள் வாகனம் ஓட்டியது தொடர்பாக 525 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
செய்தியாளர் பாஸ்கர்