Author: THE GREAT INDIA NEWS

Category: pondichery

மொரீசியசு நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன். யுனெஸ்கோ அமைப்பின் உறுப்பினராக இருக்கும் இவர் இன்று முதலமைச்சர் ரங்கசாமியை சட்டமன்றத்தில் அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது மொரீசியஸ் தமிழர்கள் சார்பில் பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க இருப்பதாகவும், புதுச்சேரியில் இருந்து துணைநிலை ஆளுநர் தமிழிசையும், முதலமைச்சர் ரங்கசாமியும் பங்கேற்க அழைப்பு விடுத்திருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்.. திருக்குறளை பன்னாட்டு நூலாக யுனெஸ்கோ அறிவிக்க பிரதமர் மோடியை கேட்டு முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர்.. திருக்குறள் மீது பற்று வைத்துள்ள பிரதமர் மோடி கடிதம் எழுதியவுடன் யுனஸ்கோவிடம் வலியுறுத்துவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

Tags:

#இன்றையசெய்திகள்புதுச்சேரி #இன்றையமுக்கியசெய்திகள்புதுச்சேரி #இன்றையசெய்திகள்புதுச்சேரி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #Tamilnadulatestnews #breakingnewstamil #Todaysnewstamil #Tamillatestnews #Tamilnewslatest #Tamilnewspaper #onlinetamilnews #tamilnews #tamilnewsportal #onlinetamilnewsportal #pondicherynewstodaytamil #puducheryflashnewstamil #unesco #thirukkural #thirukural
Comments & Conversations - 0