• முகப்பு
  • district
  • உளுந்தூர்பேட்டை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் உயிரிழப்பு....!!!

உளுந்தூர்பேட்டை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் உயிரிழப்பு....!!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் முருகன் இவர் இன்று சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்திருந்தார் . அப்போது அஜித் நகர் ரவுண்டானா பிரிவில் சாலையைக் கடக்கும் போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது . இதில் தலைமை காவலர் முருகன் படுகாயம் ஏற்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி சுரேஷ்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended