• முகப்பு
  • district
  • இருசக்கர வாகனம் நிறுத்தும் ஸ்டாண்டில் வாகனத்தை நிறுத்துவதற்கு இடம் இல்லை என்று கூறியதால் ஊழியரை தாக்கும் காவலர் சிசிடிவி காட்சி

இருசக்கர வாகனம் நிறுத்தும் ஸ்டாண்டில் வாகனத்தை நிறுத்துவதற்கு இடம் இல்லை என்று கூறியதால் ஊழியரை தாக்கும் காவலர் சிசிடிவி காட்சி

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணத்தில், நன்னிலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் வினோத் என்ற காவலர், நேற்று இரவு பேருந்து நிலையம் அருகில் திடலில் உள்ள இரு சக்கர வாகனம் நிறுத்தும் ஸ்டாண்டில் வாகனத்தை நிறுத்த சென்றுள்ளார். அப்போது அங்கு பணிபுரியும் ஊழியர் அன்பழகன், வாகனம் நிறுத்துவதற்கு இடம் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த காவலர் அருகில் உள்ள மேற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் சுந்தரம் என்ற காவலர் அழைத்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, அந்த ஊழியரை காவலர் வினோத் தாக்கியுள்ளார். இந்த காட்சி அந்த இருசக்கர வாகன ஸ்டாண்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து ஸ்டாண்டின் ஊழியர் அன்பழகன் கொடுத்த புகாரின் பெயரில் மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended