ரகசிய கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தி மனைவியை வேவு பார்த்த கணவர் மீது வழக்கு
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சென்னை வடபழனியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சஞ்சய்-சாதன்யா தம்பதி கருத்து வேறுபாட்டால் 2020ல் பிரிந்தனர்.
இதையடுத்து, விவாகரத்து கோரி சாதன்யா வழக்கு தொடுத்தார்.
இந்நிலையில், தனது காரில் ரகசிய கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தி சஞ்சய், வேவு பார்த்ததை சாதன்யா சமீபத்தில் கண்டறிந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சஞ்சயை தேடி வருகின்றனர்.
செய்தியாளர் பாஸ்கர்