பண்ருட்டி அருகே தனியார் ஊழியர் மீது வழக்கு பதிவு.

இடும்பன்

UPDATED: May 24, 2023, 8:45:12 PM

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்தவர் நடராஜன் வயது 46 ஆசாரி வேலை செய்யும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் டிவிஎஸ் கம்பெனியில் தவணை முறையில் மோட்டார் சைக்கிள் வாங்கினார்.

வாகனம் வாங்கியதற்கான தவணைத் தொகையை சரியாக கட்டி முடித்ததால் டிவிஎஸ் கிரெடிட் கம்பெனி மூலம் பர்சனல் லோன் 50,000 நடராஜனுக்கு வழங்கினர்.

இதற்கான மாதத்தை தவனைத் தொகையை சரியாக கட்டவில்லை நேற்று புதுப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள ஆண்டி குப்பம் பெட்ரோல் பங்கில் நடராஜன் பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த டிவிஎஸ் பைனான்ஸ் வசூல் ஊழியர் விக்னேஷ் நடராஜனிடம் தவணைத் தொகை கேட்டார் இதில் விக்னேஷுக்கும் நடராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு விக்னேஷ் நடராஜனை தாக்கினார்.

இதனால் காயம் அடைந்த நடராஜன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நடராஜன் அளித்த புகாரின் பேரில் விக்னேஷ் மீது பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended