- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சென்னை மார்கமாக வந்துகொண்டிருந்த கார் கன்டெய்னர் லாரி மீது மோதி பயங்கர விபத்து.
சென்னை மார்கமாக வந்துகொண்டிருந்த கார் கன்டெய்னர் லாரி மீது மோதி பயங்கர விபத்து.
லட்சுமி காந்த்
UPDATED: May 15, 2023, 6:54:12 PM
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி ஜோதிகா, மகள் சோபிகா மற்றும் சென்னை வடபழனி பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் (28). இவரது மனைவி சாதிகா, மகள் காருண்யா ஆகிய ஆறு பேரும் காரில் ஏலகிரிக்கு சுற்றுலா சென்று விட்டு,
திரும்பி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருங்காட்டுக்கோட்டை அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சோபிகா சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ஶ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 5பேரையும் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் மீட்டு தண்டலம் பகுதியில் உள்ள சவீதா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தண்டலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மீதமுள்ள ஐந்து பேர் தீவிர சிகிச்சை பிரிவில் 3 மிகவும் ஆபத்தான சூழலில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.