உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் கிராமத்தைச் சேர்ந்த கால் பந்து விளையாட்டு வீர மங்கைக்கு பிரம்மாண்ட வரவேற்பு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
ஹரியானா மாநிலம்
பஞ்சகுவாளில் நடைபெற்ற அகில இந்திய பெண்கள்
கால்பந்து அரை இறுதிப் போட்டியில் தமிழக அணியும் ஹரியானா அணியும் மோதியதில் தமிழக அணி வெற்றி பெற்று இறுதிச்சுற்று முன்னேறி உள்ளது.
தமிழக அணியில் பங்கேற்று விளையாடிய கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருநாவலூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் அவர்களின் மகள் பரமேஸ்வரி கால்பந்து விளையாட்டு வீரர் இன்று அவரது சொந்த கிராமத்திற்கு வருகை புரிந்தார்.
அவரை திருநாவலூர் கிராம பொதுமக்களின் சார்பில் மிகப் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர் கிராம சூழலில் பிறந்து வளர்ந்த தமிழ்நாடு அளவில் கால்பந்து போட்டியில் விளையாடி இறுதி சுற்று வரை முன்னேறிய தமிழக அணியின் விளையாட்டு வீரர் பரமேஸ்வரிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
கள்ளகுறிச்சி செய்தியாளர் ஆதி.சுரேஷ்