Author: THE GREAT INDIA NEWS

Category: district

தென்காசிமாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரில் தனியார் பீடிநிறுவனம் ஒன்று பீடிக்கடை நடத்திவருகிறது. இங்கேயுள்ள இரண்டு கிளைகளிலும் தலா ஐநூறு பெண்கள் பீடிசுற்றி வருகிறார்கள். கடந்த பதினைந்து மாதங்களாக இவர்களது பி.எப் கணக்கில் பீடி கடைநிர்வாகம் பணம் செலுத்துவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனைகண்டித்து இன்று இரண்டு கிளை கடைகளின் முன்பும் பெண்கள்திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடு பட்டனர். அவர்கள் சாலையில்லமர்ந்து போராட்டம் நடத்தினர். பதினைந்து மாதங்களாக செலுத்தாமல் உள்ளத்தொகையை உடனடியாக பி.எப் கணக்கில் செலுத்தவேண்டும். மேலும் போராட்டத்தின் போது கடைநிர்வாகம் அதன் காண்ட்ராக்டரை பணிநீக்கம் செய்ததாக கூறப் படுகிறது. பணி நீக்கம் செய்யப் பட்ட அதேகாண்ட்ராக்டரை மீண்டும் அதேக்கிளையில் பணியில் அமர்த்த கோரி இன்று சுமார் 200 க்கும் மேற்பட்ட பீடிசுற்றும் தொழிலாளர்கள் அந்த கடைமுன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸ்இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் தலைமையிலான போலீசார் அங்குசென்று பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். செய்தியாளர் பா. கணேசன்

Tags:

#இன்றையசெய்திகள்கடலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #cudaloorenewstodaytamil #cudalooreflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #neyvelinewstoday #peoplestruggle #pf #bdshop #bdcompany
Comments & Conversations - 0