பாபநாசத்தில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

ஆர்.தீனதயாளன்

UPDATED: May 28, 2023, 6:56:58 PM

பாபநாசம் மேல ரஸ்தா மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் மாரிமுத்து மகன் ஆனந்த் ( வயது 38 ) கட்டிட தொழிலாளி. திருமணம் ஆகி 3 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் இவருடைய மனைவி கோகிலாவுடன் குடும்பப் பிரச்சனை இருந்து வந்தது. இதனால் கடந்த ஐந்து வருடமாக கோகிலா பிரிந்து வாழ்ந்து வந்தார்.

மனைவி பிரிந்து சென்ற காரணத்தினால் ஆனந்த் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நைலான் கயிற்றால் கழுத்தில் மாட்டிக் கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவத்தை கேள்விப்பட்ட அவருடைய மனைவி கோகிலா பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப் இன்ஸ்பெக்டர் குமார் , முதல் நிலை காவலர் குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended