பாக்ஸ்கான் தொழிற்சாலை பேருந்தும் லாரியும் மோதி பயங்கர விபத்து .
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
காஞ்சிபுரம் மாவட்டம் ஐயங்கார் குளம் பகுதியில் பாக்ஸ்கான் செல்போன் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்கள் தங்கி உள்ளனர். மதிய ஷிப்ட்டில் பணி செய்ய பெண் ஊழியர்களை ஏற்றிக் கொண்டு தனியார் நிறுவனப் பேருந்து சுங்குவார்சத்திரம் பகுதியிலுள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தபோது, செவிலிமேடு பாலாற்று மேம்பாலம் அருகே வந்தவாசி மார்கமாக சென்ற லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தனியார் நிறுவன பேருந்தில் பயணம் செய்த16 பெண்கள் காயம் அடைந்தனர்.
மேலும் தனியார் பேருந்தின் ஓட்டுநர் காயமடைந்தார். தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம்பட்டவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்து போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தினால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.