• முகப்பு
  • குற்றம்
  • பாபநாசம் அருகே அம்மாபேட்டையில் இறந்தவரின் உடலை எடுத்து செல்வதில் இருதரப்பினரிடையே மோதல்.

பாபநாசம் அருகே அம்மாபேட்டையில் இறந்தவரின் உடலை எடுத்து செல்வதில் இருதரப்பினரிடையே மோதல்.

ஆர்.தீனதயாளன் 

UPDATED: May 27, 2023, 6:43:00 PM

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அம்மாப்பேட்டை உடையார்கோவில் வடபாதி பகுதியில் சீனிவாசன் என்பவர் 27.5.2023 உயிரிழந்தார்.

அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் மயானத்திற்கு எடுத்து செல்லும்போது மற்றொரு தரப்பினர் தாங்கள் தெரு வழியாக பிரேதத்தை எடுத்து செல்லக்கூடாது என வழியில் டாடா ஏஸ் வாகனத்தை சாலையின் குறுக்கே போட்டு மறித்து உள்ளனர்.

இந்த வாக்குவாதத்தில் இருத்தருப்பினரிடையே மோதலாக மறியது. இதில் ஒருவருக்கு ஒருவர் கற்களையும் கட்டைகளையும் கொண்டு தாக்கிக் கொண்டனர்.

இதனால் பதட்டமான சூழல் உருவானது. இதனால் அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, இறந்தவரின் உடலை போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்தனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended