- முகப்பு
- pondichery
- நடுக்கடலில் படகு பழுது.மீனவர்கள் தத்தளிப்பு.
நடுக்கடலில் படகு பழுது.மீனவர்கள் தத்தளிப்பு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
புதுச்சேரியில் இருந்து கடந்த 5-ந்தேதி புதுச்சேரி மீனவர்கள் 9 பேர் மீன்பிடிக்க சென்றனர். அப்போது நடுக்கடலில் மீனவர்கள் சென்ற படகு திடீரென்று பழுதானது. இதுகுறித்து மீனவர்கள் மீன்வளத் துறைக்கு தகவல் அளித்தனர்.
அந்த தகவலின் பேரில் இந்திய கடலோர காவல் படையினரை தொடர்பு கொண்ட புதுச்சேரி மீன்வளத் துறை அதிகாரிகள் நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் ஒன்பது மீனவர்களை பத்திரமாக மீட்டு தரும்படி கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி நடு கடலில் தத்தளித்த ஒன்பது மீனவர்களையும் இந்திய கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.