• முகப்பு
  • political
  • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு ?

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூரில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருவாரூர் தேரோடும்வீதிகளில் ஒன்றான தெற்கு வீதியை, டாக்டர் கலைஞர் சாலை என பெயர் மாற்றப் படுவதாக நகரமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெற்கு வீதியில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு பாஜகசார்பில் நேற்று முன் தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜகமாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். இந்நிலையில், திருவாரூரில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அண்ணாமலை உள்ளிட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட பல பா.ஜ.க வினர் மீது திருவாரூர் நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்: பா. க. ஸ்ரீதேவி.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended