பெரியார் பல்கலைக்கழக பருவத்தேர்வில் சாதி குறித்த கேள்வி ஆட்சியர் அலுவலகத்தை BJP முற்றுகை.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியான கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையாகி உள்ளது. முதுகலை வரலாறு இரண்டாம் ஆண்டு தேர்வு வினாத்தாளில் நான்கு சாதிப்பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி இடம் பெற்றது இந்த கேள்வி கடும் சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளது.
இதற்கு பல்கலைக்கழகம் தரப்பில் இருந்து ஏற்கனவே வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக பருவத்தேர்வில் சாதி குறித்த கேள்வி இடம் பெற்றதற்கு கண்டனம் தெரிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜக பட்டியலின அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இதற்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே சேலம் பெரியார் பல்கலைக்கழக பருவத்தேர்வு சாதி குறித்த கேள்வி இடம் பெற்றதற்கு மக்கள் நீதி மையம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் செய்தியாளர் இளவரசன்.