பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கக் கோரி பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தேனி மாவட்டம் உத்தமபாளையம் கல்லூரி சாலையில் அமைந்துள்ள ஜோதி ஐயப்பன் கோவில் அருகில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கோவில் முன்பாகவும் ரோட்டிலும் தேங்குகிறது இதனால் பொது மக்களுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது...
அருகில் அமைந்திருக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு நீர் ஏற்றும் மோட்டார் இயந்திரம் பழுதடைந்து ஷாக் அடிக்கும் நிலையில் உள்ளது..
இன்று காலை பள்ளிக்குச் செல்லும் ஒரு குழந்தை இந்த சாக்கடையில் விழுந்து மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியது..
இந்தப் பிரச்சினை சம்பந்தமாக ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியின் மூலம் பேரூராட்சிக்கு பலமுறை மனு கொடுத்தும் நேரில் சொல்லியும் தீர்ந்தபாடில்லை..
ஆகவே இன்று பொதுமக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் சேர்ந்து கல்லூரி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தினர்..
பாரதிய ஜனதா கட்சியின் நகரத் தலைவர் பி தெய்வம் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் தங்க பொன் ராஜா அவர்கள் முன்னிலை வகித்தார்.
நகர பொதுச்செயலாளர்கள் மாரிராஜா, பெரியசாமி நகரத் துணைத் தலைவர்கள் செல்வராஜ் முத்துசரவணன் அய்யப்பன் ராஜன் மற்றும் இளைஞர் அணி பொதுச் செயலாளர் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் சிலைமணி அவர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர் காசிம் அவர்கள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தனர்..
இந்த பகுதியில் மூன்று நாட்களுக்குள் நிரந்தரமான தீர்வு ஏற்படுத்தி தருவதாக பேரூராட்சி தலைவர் வாக்குறுதி அளித்துள்ளார்..
பொறுத்திருந்து பார்ப்போம்.