துறையூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

அருண்

UPDATED: May 29, 2023, 7:03:19 PM

திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் முன்பு மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மணல் கடத்தலை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் தனபால் மணி கந்தசாமி ஆகிய நால்வரையும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அவர்களை வலுவான சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரி
நேர்மையாக அரசு அதிகாரிகள் அச்சமின்றி பணி செய்ய வேண்டும் என்றும் மணல் கொள்ளையர்களை இரும்பு கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும் என்றும்  கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் செய்த பாஜகவினரை துறையூர் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended