• முகப்பு
  • குற்றம்
  • மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் முன் விரோதம் காரணமாக புவனேஸ்வர் என்ற இளைஞரின் நாயை கத்தியால் வெட்டி கொலை செய்த 3 கொடூரன்கள்

மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் முன் விரோதம் காரணமாக புவனேஸ்வர் என்ற இளைஞரின் நாயை கத்தியால் வெட்டி கொலை செய்த 3 கொடூரன்கள்

L.குமார்

UPDATED: May 30, 2023, 7:34:23 AM

அத்திப்பட்டு அன்பழகன் நகரை சேர்ந்தவர் புவனேஸ்வர் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது நண்பர்களுடன் அத்திப்பட்டில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மது அருந்தி கொண்டிருக்கின்ற போது ஏற்பட்ட தகராறில் அத்திப்பட்டு காந்தி தெருவை சேர்ந்த சேர்ந்த சங்கர், வ.உ.சி நகரை சேர்ந்த பிரபாகரன், அத்திப்பட்டு கலைஞர் நகரை சேர்ந்த ரோகித் ஆகியோர் தாக்கியதில் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்று வருகிறார்‌‌.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சங்கர், பிரபாகரன், ரோகித் ஆகியோர் புவனேஸ்வர் வீட்டிற்கு சென்று பயங்கர ஆயுதங்களுடன் சத்தம் போட்டு உள்ளனர்.

அப்போது வீட்டில் இருந்த நாய் ஒன்று அவர்களை பார்த்து குறைத்துள்ளது இதனால் ஆத்திரம் அடைந்த மூவரும் நாயை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

நாயின் மரண ஓலத்தை கேட்டு புவனேஸ்வர் வீட்டிலிருந்தவர்கள் சத்தம் போடவே அருகாமையில் உள்ளவர்கள் கூடியதால் அங்கிருந்து மூவரும் தப்பி சென்றுள்ளனர்.

இது குறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மீஞ்சூர் காவல்துறையினர் சங்கர், பிரபாகரன், ரோகித் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended