• முகப்பு
  • அரசியல்
  • அப்பாவி மக்கள் கள்ள சாராயத்தால் மரணம் அடைய காரணமாக இருந்த திமுகவின் திராவிட மாடல் ஆட்சியை கண்டித்து பாரதிய ஜனதா மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

அப்பாவி மக்கள் கள்ள சாராயத்தால் மரணம் அடைய காரணமாக இருந்த திமுகவின் திராவிட மாடல் ஆட்சியை கண்டித்து பாரதிய ஜனதா மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

முத்தையா

UPDATED: May 20, 2023, 7:42:40 PM

கள்ளச்சாராயத்தால் அப்பாவி மக்கள் மரணம் அடைய காரணமாக இருந்த திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியை கண்டித்து நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு இன்று நாமக்கல் மேற்கு மாவட்டம் நாமக்கல் கிழக்கு மாவட்டம் ஆகிய இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட மகளிர் அணி தலைவி சித்ரா தலைமையில் நடைபெற்றது.

இதில் இரண்டு மாவட்ட தலைவர்களான மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜேஷ் குமார், கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மாநில பொறுப்பாளர்கள் மகளிர் அணி மற்றும்

இதர அணி பொறுப்பாளர்களும் திரளாக கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எதிராகவும், தமிழக மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினார்கள்.

VIDEOS

RELATED NEWS

Recommended