வந்தவாசியில் பசலி வருவாய் தீர்வாயம் நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பசலி வருவாய் தீர்வாயம் நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் வினோத் குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் வந்தவாசி வட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பட்டா மாற்றம் நத்தம் பட்டா நகல் இலவச வீட்டு மனை பட்டா வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி உழவர் பாதுகாப்பு அட்டை குடும்ப அட்டை வேளாண்மைத்துறை திட்டங்கள் உள்ளிட்டவைகளுக்கு வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுத்து பட்டா மாற்றம் 56 நபருக்கும் நத்தம் பட்டா வழங்கல் 28 நபருக்கும் இலவச வீட்டு மனை பட்டா 20 நபருக்கும் வண்டல் மண் அனுமதி 22 நபருக்கும் சமூக பாதுகாப்பு திட்ட உதவி தொகை 19 நபருக்கும் குடும்ப அட்டை 20 நபருக்கும் உள்ளிட்ட 197 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கோட்டாட்சியர் வினோத்குமார் வழங்கினார்.
விழாவில் வட்டாட்சியர் முருகானந்தம் சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் சுபாஷ்சந்தர், மருத்துவ அலுவலர் சிவப்பிரியா, வேளாண்மை அலுவலர் குமரன், தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் தெய்வசிகாமணி, உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
வந்தவாசி செய்தியாளர் அகிலன் சுப்பிரமணியன்.