பாவூர்சத்திரம் ரயில்வே கேட் தண்டவாளம் அருகே காயங்களுடன் வாலிபர் பிணமாக மீட்பு.

ராஜ்குமார்

UPDATED: May 9, 2023, 11:07:54 AM

பாவூர்சத்திரம் ரயில்வே கேட் தண்டவாளம் அருகே நேற்று முன்தினம் இரவு 7.4.2023 வாலிபர் ஒருவர் காயங்களுடன் பிணமாக கிடப்பதாக தென்காசி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ரயில்வே போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

பின்னர் இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், நெல்லையில் இருந்து தென்காசி வழியாக இயக்கப்பட்டு வரும் தாம்பரம் சிறப்பு ரெயில் நேற்று முன்தினம் இரவு பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் நின்றது.

பின்னர் இந்த ரெயில் தென்காசி நோக்கி சென்றது. அந்த ரெயிலில் படிக்கட்டில் நின்று பயணம் செய்தபோது ரெயில்வே கேட்டின் அருகே உள்ள சிக்னல் கம்பத்தில் மோதி கீழே விழுந்து இறந்திருக்கலாம் என ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

அவருக்கு 25 வயது இருக்கும். அவர் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. அவரது உடலில் உள்ள அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended