• முகப்பு
  • district
  • கள்ளக்குறிச்சியில் மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி.

கள்ளக்குறிச்சியில் மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் நகரப் பகுதியை தூய்மையாக வைத்திருப்பதை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து நகரங்களின் தூய்மை காண மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கொடியசைத்து துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க நகரின் தூய்மையை வலியுறுத்தி நடைபெற்ற இந்த பேரணியில் தூய்மையான நகரத்தை உருவாக்க ஒன்றிணைவோம் என்ற கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனர். இதில் நகர மன்ற தலைவர் சுப்புராயலு உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் நகராட்சி ஆணையர் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி . சுரேஷ்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended