தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு காட்பாடியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

வாசுதேவன்

UPDATED: May 16, 2023, 11:13:26 AM

வேலூர் மாநகராட்சி மண்டலம் 1 காட்பாடி காந்தி நகர் பகுதியில் தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடத்தில் மாநகர நல அலுவலர் தலைமையில், முதுநிலை பூச்சியியல் வல்லுநர் முன்னிலையில், சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் வரவேற்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கும், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொது மக்களுக்கும் டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

பொதுமக்களிடத்தில் வீட்டின் அருகிலோ, மாடியிலோ மழை நீர் தேங்காதவாறு கவனித்துக் கொள்ளும்படியும், கொசு உற்பத்தியை தடுக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது.

இதில் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், அனிமேட்டர்கள், டிபிசி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended