• முகப்பு
  • district
  • செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு விழிப்புணர்வு ஓட்டம்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு விழிப்புணர்வு ஓட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இன்று (18.7.22) காலை திருச்சிராப்பள்ளி ஆம்னி பேருந்து நிலையம் அருகில் உள்ள உப்புச் சத்தியாகிரகம் நினைவுத் தூண் அருகிலிருந்து மாணவ, மாணவிகள் மற்றும் உள்ள தன்னார்வலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப் குமார், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ஓட்டமானது, இரயில்வே சந்திப்பு, இரயில்வே பாலம், மன்னார்புரம் , டிவிஎஸ் டோல்கேட், வழியாக அண்ணா விளையாட்டரங்கம் சென்றடைந்தது. இந்த ஓட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர். இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி, வருவாய் கோட்டாட்சியர் கோ.தவச்செல்வம், காவல் உதவி ஆணையர் அஜய்தங்கம், வட்டாட்சியர் சேக்முஜிப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மணப்பாறை செய்தியாளர் லட்சுமணன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended