ஏவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க அலுவலகத்தை கே. என். நேரு திறந்து வைத்தார்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு , இன்று (22.6.22) திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி ஒன்றியம், ஏவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கு ரூபாய் 20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அலுவலகக் கட்டடடத்தினைத் திறந்து வைத்து 22 பயனாளிகளுக்கு ரூபாய் 18 இலட்சத்திற்கான கடன் உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப் குமார், இ.ஆ.ப.,சட்டமன்ற உறுப்பினர்கள் சீ.கதிரவன்,
ந. தியாகராஜன் ,செ. ஸ்டாலின் குமார், ஒன்றியக்குழு தலைவர்ஒன்றியக்குழு தலைவர் மாலா ராமச்சந்திரன், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தி. ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மணப்பாறை செய்தியாளர் லட்சுமணன்