பண்ருட்டியில் மீன் வியாபாரியை கொலை செய்த ஆட்டோ டிரைவர்.

இடும்பன்

UPDATED: May 26, 2023, 3:13:44 PM

பண்ருட்டி அடுத்த கந்தன்பாளையத்தை சேர்ந்தவர் பன்னீர் (வயது 50).மீன் வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர் குமார் என்ற சிவகுமார்(38) ஆட்டோ டிரைவர். கடந்தாண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி குமார் மனைவி வீட்டு தோட்டத்தில் துணி துவைத்துக் கொண்டிருக்கும் போது யாரோ எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது.

இதனால் தெருவில் நின்று கொண்டு  குமார் திட்டி உள்ளார் அப்போது அங்கு வந்த மீன் வியாபாரி பன்னீர் இதை தட்டி கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு அங்கு இருந்த மர சட்டத்தினால் பன்னீரை, குமார் கடுமையாக தாக்கி உள்ளார்.

படுகாயத்துடன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பன்னீர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் .இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கொலையாளி குமாரை வலை வீசி தேடி வந்தனர். 

இதற்கிடையில் நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை துப்புதுலக்கி குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என்று கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பண்ருட்டி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் தங்கேவல் போலீசார் ஆனந்த், ராஜி, கணேச மூர்த்தி ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் இந்த வழக்கு விசாரணையை பல்வேறு கோணங்களில் நடத்தி தலைமறைவாக இருந்த கொலையாளி குமார் என்கின்ற சிவகுமாரை அதிரடியாக கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended