பண்ருட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக ஆட்டோ டிரைவர் தற்கொலை

இடும்பன்

UPDATED: May 7, 2023, 3:07:10 PM

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சிறுவத்தூர் 7-வது தெருவை சேர்ந்தவர் ஞானவேல் (வயது 40),ஆட்டோ டிரைவர். கடந்த மூன்று மாத காலமாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஞானவேல் நேற்று 6-5-23 இரவு 10 வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கீழே விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் ஞான வேலுவை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஞானவேல் பரிதாபமாக உயிர் இழந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

VIDEOS

RELATED NEWS

Recommended