ஸ்ரீமுஷ்ணம் அருகே சோழதரம் காவல் நிலையத்தில் 34 ஆண்டு காலம் பணியாற்றிய உதவி ஆய்வாளர் மூவேந்தர் இன்று பணி நிறைவு விழா.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த சோழவரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் மூவேந்தர் இன்று பணி நிறைவு விழா.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி கடந்த 34 ஆண்டுகாலமாக காவல் துறையில் மிக சிறப்பாக பணி ஆற்றிய தோடு உடல் நலத்தையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும்.
காவல்துறையில் பெரும்பாலும் மன உளைச்சலோடு ஒவ்வொரு காவலர்களை காணப்படுவார்கள், ஆனால் மூவேந்தர் எப்போதும் எந்த நேரத்திலும் எந்த வேலைகளையும் சொன்னாலும் முகம் சுளிக்காமல் வேலை பார்க்கக் கூடியவர்.
34 ஆண்டுகாலம் காவல்துறையில் பணியாற்றி வந்த நண்பரை இழக்கிறோம் , மீண்டும் ஒரு நண்பர் காவலர் கிடைப்பது பெரிய விஷயம்.
இதற்கெல்லாம் உறுதுணையாக இருந்தவர் அவரது மனைவி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என புகழாரம் சூட்டினார்.
உடன் சொழதரம் துணை ஆய்வாளர் மாணிக்கராஜா , மகேஸ்வரி , ராதாகிருஷ்ணன் , குருபிரசாத் , மணிமாறன், அகிலன் மற்றும் போலீசார் , ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்துகொண்டு வழியனுப்பி வைத்தனர்.