அருள்மிகு ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடைவிழா!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருநெல்வேலி டவுண், காமராஜ் தெருவில் வீற்றிருந்து, அருளாட்சி புரிந்து வரும், அன்னை ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் திருக்கோவில் கொடைவிழா, நேற்று (ஜூலை.26) வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கொடைவிழாவினை முன்னிட்டு, காலையில் பக்தர்கள் "பால்குடம்" எடுத்து, ஊர்வலமாக வந்தனர். அதனை தொடர்ந்து, பக்தர்கள் தங்களுடைய வீடுகளின் முன்பாக, பொங்கலிட்டு வழிபட்டனர். அதன் பின்னர், அம்பாளுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றன.
"சாமக்கொடை" வைபவத்துடன், கொடைவிழா இனிதே நிறைவு பெற்றது.விழாக் குழுவினர் மற்றும் இளைஞர்கள் இணைந்து, கொடைவிழாவுக்கான ஏற்பாடுகளை, மிகச்சிறப்பாக செய்து இருந்தனர்.
திருநெல்வேலி செய்தியாளர் "மேலப்பாளையம்" ஹஸன்.