• முகப்பு
  • district
  • மயிலை வேட்டையாடி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற 3 வாலிபர்கள் கைது - நாட்டு துப்பாக்கி மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

மயிலை வேட்டையாடி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற 3 வாலிபர்கள் கைது - நாட்டு துப்பாக்கி மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் மரூர் கிராம எல்லைப் பகுதியில் கள்ளக்குறிச்சி வானவர் முருகன் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தபோது , மரூர் கிராம எல்லையில் உள்ள விவசாய நிலத்தில் மூன்று மயில்களை வேட்டையாடிக் கொண்றது தெரியவந்தது . இதனை அடுத்து மயில்களை வேட்டையாடிய பாஸ்கல் ராஜ் , பிரவீன் குமார் , அருள் ஆனந்தராஜ் ஆகிய மூன்று பேரை கைது செய்த வனத்துறை அதிகாரிகள் அவர்களிடம் இருந்து உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி மற்றும் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து மூன்று பேரையும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended