தூத்துக்குடி விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது - 1 கிலோ 500 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல்.
மாரிமுத்து
UPDATED: May 31, 2023, 10:54:18 AM
தூத்துக்குடியில் நேற்று (30.05.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது காயல்பட்டினம் நகராட்சி அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில்,
அவர் காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவை சேர்ந்த ராமர் மகன் பிரேம்குமார் (35) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரியான பிரேம்குமாரை கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.