• முகப்பு
  • district
  • அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பு ஊழியர்கள் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு பணி நிரந்தரம் செய்யக்கோரி பிரார்த்தனை.

அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பு ஊழியர்கள் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு பணி நிரந்தரம் செய்யக்கோரி பிரார்த்தனை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பு ஊழியர்கள் இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோவிலில் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர் . பின்பு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா முன்னிட்டு அண்ணாமலை நகர் சிறப்பு பேரூராட்சியின் தலைவர் தலைமையில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பின்பு தொகுப்பு ஊழியர்களின் தலைவர் கூறுகையில் முன்பு கலைஞர் பதவியில் இருக்கும் பொழுது நாங்கள் வேலைக்கு வந்தோம் 10 ஆண்டுகளாக நிரந்தரம் செய்யாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் . தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எங்கள் குடும்பத்திற்கு விளக்கேற்றி வைக்க வேண்டும் எங்களுடைய வாழ்வாதாரத்தை கருணை உள்ளத்துடன் எங்களுக்கு செய்து தரவேண்டுமென்று முன்னாள் முதல்வர் கலைஞர் படத்திற்கு முன்பு பிரார்த்தனை செய்தனர் . தமிழக முதல்வர் இந்த ஆண்டு எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended