• முகப்பு
  • crime
  • சைதாப்பேட்டை ரயில்நிலையத்தில் ஆந்திராவாலிபரை வெட்டிவிட்டு செல் போனை பறித்துச்சென்ற கும்பலால் பரபரப்பு.!

சைதாப்பேட்டை ரயில்நிலையத்தில் ஆந்திராவாலிபரை வெட்டிவிட்டு செல் போனை பறித்துச்சென்ற கும்பலால் பரபரப்பு.!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஆந்திராவைச்சேர்ந்தவர் பூபால சோக். இவரதுதோழி ஒருவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சென்னை வந்த பூபாலஅசோக் இன்று சைதாப்பேட்டை ரயில்நிலையத்தில் தோழியைசந்தித்து பேசினார். அப்போது டிக்கெட்கவுண்டர் அருகில் இருந்தகழிவறைக்கு சென்றார். பின்தொடர்ந்து சென்ற மூன்று பேர் கொண்டகும்பல்கத்தியை காட்டி மிரட்டிபூபால அசோக்கிடம் செல் போனை கேட்டுள்ளனர். தர மறுத்ததால் கை, காலில் வெட்டிவிட்டு செல் போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். ரத்தகாயத்துடன் கிடந்த அவரை ரயில்வேபோலீசார் சிகிச்சைக்காக ராயப் பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாகரயில்வே காவல்த் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் பூபால அசோக்கிடம் பறித்துசென்ற செல்போன் அவரது தோழியுடையது என்பதுதெரிந்தது. அங்குள்ள சி..சிடிவிகாட்சியை கைப்பற்றி ரயில்வே போலீசார் ஆய்வுசெய்து வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் ஒருவரைபிடித்து காவல்த் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர் செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended