ஆனந்த மாரியம்மன் திருக்கோயிலில் 17ம் ஆண்டு சிறப்பு திருவிளக்கு பூஜை வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கும்பகோணம் அப்புக்குட்டிதெருவில் அமைந்துள்ள ஆனந்த மாரியம்மன் விசேஷமானது, இத்திருக்கோயிலில் வைகாசி மாதம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெறும், அதுபோலவே இவ்வாண்டும் இவ்விழா கடந்த 27ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
நாள்தோறும் மூலவர் அம்மனுக்கு மஞ்சள் காப்பு, புஷ்ப அலங்காரம், சந்தன காப்பு, ஆண்டாள் அலங்காரம், காதம்பரி அலங்காரம், குங்குமம் அலங்காரம், பச்சையம்மன் அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு விதமான அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 17ம் ஆண்டாக, சிறப்பு திருவிளக்கு பூஜை வீதியுலா நடைபெற்றது கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் இருந்து நூற்றுக்கணக்காண பெண்கள் கைகளில் திருவிளக்கு ஏந்தி யானை முன்செல்ல, கேரள ஜெண்டை மேளம் முழங்க, முக்கிய வீதிகள் வழியாக திருக்கோயிலுக்கு வந்தடைந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு மகிழ்ந்தனர் தொடர்ந்து நாளை 29ம் தேதி ஞாயிறு 69ம் ஆண்டு பால்குட கோடாபிஷேகம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.
கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்