கஞ்சா விற்ற 18 வயது சிறுவன் கைது.

குமரவேல்

UPDATED: May 9, 2023, 7:42:23 PM

நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட எய்தனூர் அரசு பள்ளி அருகே 9.5.2023 மாலை நெல்லிக்குப்பம் காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் ராகுல் (18) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் 50 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததாக அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு போலிசார் அனுப்பி வைத்துள்ளனர்.

  • 1

VIDEOS

RELATED NEWS

Recommended