அமித்ஷா மகன் சர்வாதிகாரியாக செயல்பட்டு ஐபிஎல் குஜராத் அணியை வெற்றிபெற வைத்துள்ளார்?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
2022 ஐ.பி.எல்., போட்டியின் முடிவுகள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வு அமைப்பு கருதுகிறது என்று சுப்பிரமணிய சுவாமி ராஜ்யசபா எம்.பி.,யும் பா.ஜ., மூத்த தலைவர கருத்து தெரிவித்துள்ளார்.
ஆமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய மோடி மைதானத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி, ஐ.பி.எல்.,லில் முதன்முறையாக களமிறங்கிய குஜராத் அணி, தொடரைக் கைப்பற்றி சாம்பியன் பட்டம் பெற்றது.
இது தொடர்பாக சுப்ரமணியசாமி வெளியிட்ட அறிக்கை: அமித்ஷாவின் மகன் பிசிசிஐ.,- யை ஆட்டிப்படைத்து சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார், ஆதலால் மத்திய அரசு இவ்விஷயத்தில் விசாரணை செய்யாது. இந்த விவகாரத்தில் தெளிவு கிடைக்க பொதுநல வழக்கு அவசியம் என்றும் கூறினார்.